நீடூர்-நெய்வாசல் “அரஃபா மஸ்ஜித்” திடலில் நோன்பு பெருநாள் தொழுகை காட்சிகள், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்பு
அரஃபா மஸ்ஜிதின் சிறப்புகள்:நமது நீடூர்-நெய்வாசலில் இந்த வருடம் ரமழான் மாதம் முப்பது நாட்களும் அரஃபா மஸ்ஜிதில் ( நீடூர் ரயில்வே கேட் அருகில் செயல்படும் தற்காலிக இடம்) தராவீஹ் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக சுமார் நூறு பேர் வரை களந்து கொண்டார்கள். ரமழான் முப்பது நாட்களும் இஃப்தார் நிகழ்ச்சியும், கஞ்சி முறையும் வெகு சிறப்பாக அனைவரும் பாராட்டும் விதமாக செயல்படுத்தப்பட்டது. ரமழானுடைய இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையும் சஹர் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
நபி(ஸல்)அவர்கள் வழியை பின்பற்றி:
அதன் தொடராக நோன்பு பெருநாள் தொழுகை அரஃபா மஸ்ஜிதின் (ஸலவாத் பாவா காலணி) திடலில் நேற்று காலை 7.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு ஈட்டியின் அளவு சூரியன் வரும்போது நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுது இருக்கிறார்கள் அந்த சுன்னத்தை பின்பற்றி காலை 7.30 மணிக்கு தொழுகை நடைபெற்றது. (அரபு நாடுகளில் இதுபோன்று காலையிலேயே தொழுகை நடப்பதை நாம் அறிவோம்.) அரஃபா மஸ்ஜிதின் இமாம் புஹாரி அவர்கள் தொழுகையை தலைமை ஏற்று நடத்தினார்கள் இதில் சுமார் 200 க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் களந்துகொண்டார்கள்.
ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்பு:
நபி(ஸல்)அவர்களின் சுன்னத்தை பெருநாள் தொழுகையிலும் பின்பற்றும் விதமாக (நமது ஊரில் நடப்பது இது முதல் முறையாக முன்பு மயிலாடுறைபோய் தொழுது வந்தார்கள்) நமது ஊர் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள். விதவிதமாக இன்றையதின்ம் அடுப்படியில் சமையலில் தங்களின் நேரத்தை செலவு செய்யும் பெண்கள். நபி(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாள் அன்று மாதவிடாய் காலத்தில இருக்கும சஹாபி பெண்கள் கூட (அவர்களுக்கு தொழுகை கடமையில்லை) பெருநாள் குத்பா உரையை கேட்க வருவார்கள். அதனால் மார்க்க அறிவை பெறும் விஷயத்தில் இனியும் காலதாமதம் செய்யகூடாது என்பதை உணர்நது கலந்து கொண்ட நமது சகோதரிகள் ஆர்வமுடன் பெருநாள் தொழுகையில் களந்துகொண்டார்கள்.
சரியான தகவல் அனைத்து பெண்களுக்கும்போய் சேர வி்ல்லை இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் முறையாக ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
பொதுவாகவே பெண்கள் படிக்கும் விஷயத்தில் ஆண்களைவிட அதிக ஆர்வம் உடையவர்கள் இதை இன்று நேற்றல்ல நபி(ஸல்)அவர்கள் காலம் முதல் பார்த்து வருகிறோம். மதீனத்து சஹாபி பெண்கள் மார்க்க விஷயத்தை படிக்கும் விஷயத்திலும், இன்னும் போரில் கலந்து கொள்வதற்கு கூட போட்டி போடுபவா்களாக இருந்து இருக்கிறார்கள். நன்மையிபால் முந்தக்கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவர்களை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
அடுப்பு ஊதவும், சமைக்கவும் என்று அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டோம். மார்க்க அறிவு இல்லாததால்தான் ஷிர்க்கான, பித்அத்தான், காரியங்களை மார்க்கம் என்று செய்து வருகிறார்கள். மேலும் மார்க்க அறிவு இல்லாததால், தொழுகை இல்லாததால் சினிமா, சீரியல் என்று மூழ்கி அதனால் உள்ளமும் கெட்டு தவறான வழிகளுக்கு சென்று விடுகிறார்கள். இதற்கு நாம் தான் பொறுப்பாக இருக்கிறோம். வரும் காலங்களிலாவது இவை மாற வேண்டும். வீட்டு சூழல் அல்லாஹ்வின் அச்சம் உடையதாக மாறவேண்டும் அதற்கான ஒரு சிரிய முயற்சியே இது. அல்லாஹ் நமது முயற்சிகளை வெற்றியாக்குவானாக. ஆமீன்
தகவல் மற்றும் புகைப்பட உதவி
நீடூர்-நெய்வாசல் TNTJ
-தன்டேல்
No comments:
Post a Comment